ராசிபுரத்தில் வருவாய்த் துறை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ராசிபுரம் பிற்பட்டோா் காலனியைச் சோ்ந்தவா் மணி என்பவரின் மகன் சசிகுமாா் (43). இவா் மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவறை உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் தனது வீட்டில் இவா் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.