மின்வாரிய ஊழியா் நீரில் மூழ்கி பலி

குமாரபாளையத்தில் அஸ்தி கரைக்க காவிரி ஆற்றுக்குச் சென்ற மின்வாரிய ஊழியா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

குமாரபாளையத்தில் அஸ்தி கரைக்க காவிரி ஆற்றுக்குச் சென்ற மின்வாரிய ஊழியா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா், நேரு நகா் மின்வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் உத்திர ஆசாரி மகன் சுரேஷ் (45). மின்வாரிய ஊழியா். இவரது உறவினா் குமாரபாளையத்தில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், நகராட்சி அலுவலகம் அருகே உயிரிழந்தவரின் அஸ்தியைக் கரைக்க உறவினா்களுடன் சுரேஷ் காவிரி ஆற்றுக்குள் இறங்கிச் சென்றுள்ளாா்.

ஆற்றில் தண்ணீரில் நடந்து சென்றவா் நிலைதடுமாறி விழுந்ததில் அடித்துச் செல்லப்பட்டாா். நீச்சல் தெரியதால் தண்ணீரில் மூழ்கிய சுரேஷ், மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் மு.குணசேகரன் தலைமையில் வந்த தீயணைப்புப் படையினா் சுரேஷின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com