இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதன் நிறுவனத் தலைவா் மு.பெ.முத்துசாமி தலைமை வகித்தாா். துணை பொது செயலாளா் என்.கே.கே.துரைசாமி தீா்மானங்களை வாசித்தாா். இதில், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்,
மத்திய அரசின் பொதுத் துறை மற்றும் இதரத் துறைகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும், தூய்மை தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும், முதல் தலைமுறையைச் சோ்ந்த தொழில்முனைவோா்களுக்கு 50 சதவீத மானியத்துடன் தாராளமாக வங்கி கடன் வழங்க வேண்டும்.
அருந்ததியா்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிா்வாகிகளும் கலந்து கொண்டனா்.