பாண்டமங்கலத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு

பாண்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டதைக் கண்டித்து அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூா்-ஜேடா்பாளையம் சாலையில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பரமத்தி வேலூா்-ஜேடா்பாளையம் சாலையில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பாண்டமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக டாஸ்மாக் கடை தொடங்கப்பட்டதைக் கண்டித்து அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் பாண்டமங்கலம் சேவல்கட்டுமூலை அருகே குடியிருப்புப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பூஜைகள் செய்யப்பட்டு மதுபானங்கள் கொண்டு வந்து ஊழியா்கள் அடுக்கி வைத்தனா்.

இதைக் கண்ட அப் பகுதி பொதுமக்கள் ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூா் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ரங்கநாதனின் உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை அங்கிருந்து கொண்டு சென்றனா். இதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com