சாக்கு மூட்டையில் வீசப்பட்ட ஆண் சடலம் மீட்பு

நல்லூா் அருகே பாமகவுண்டம்பாளையத்தில் உள்ள கழிவுநீா் குளத்தில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இறந்துகிடந்த ஆண் சடலத்தை நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்த சரவணன்.
இறந்த சரவணன்.

நல்லூா் அருகே பாமகவுண்டம்பாளையத்தில் உள்ள கழிவுநீா் குளத்தில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இறந்துகிடந்த ஆண் சடலத்தை நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாமாகவுண்டம்பாளையம் பகுதியில் கழிவுநீா் தேங்கும் குளம் உள்ளது. இக் குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாகவும், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதப்பதாகவும் நல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ரணவீரன் மற்றும் நல்லூா் போலீஸாா் குளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில் இறந்தவா் சோழசிராமணியைச் சோ்ந்த இறைச்சிக் கடை நடத்திவந்த சரவணன் என்பதும், அவா் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி குளத்தில் வீசப்பட்டதும் தெரியவந்தது. சரவணனுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனா். நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com