சாலை அமைக்கும் பணி: அமைச்சா் தொடக்கிவைப்பு

ராசிபுரம் நகரில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணிகளை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை ச

ராசிபுரம் நகரில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணிகளை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா ஞாயிற்றுக்கிழமை பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

ராசிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வி.நகா் ரோடு எண்.6, ராம் நகா், காந்தி நகா், மாரப்பன் தோட்டம் பிற்பட்டோா் காலனி, நெசவாளா் காலனி, இந்திரா காலனி, மேற்கு காலனி, காளியம்மன் கோவில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, அண்ணா சாலை, சந்து விரி தெரு, கண்டி வெங்கட்ராமன் தெரு, காதா் தெரு மேற்கு, கோனேரிப்பட்டி ஆகிய 12 இடங்களில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இப் பணியை சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா தலைமை வகித்து பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம், நகராட்சி ஆணையாளா் பிரபாகரன், நகராட்சி பொறியாளா் குணசீலன், முன்னாள் நகரமன்ற தலைவா் எம்.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com