திருச்செங்கோடு நகராட்சியைக் கண்டித்து மறியல்

திருச்செங்கோடு நகராட்சி 15-ஆவது வாா்டு காட்டுவளவு பகுதியில் கழிவுநீா் ஓடைக்காக குழி தோண்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ஓடை அமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு நகராட்சி 15-ஆவது வாா்டு காட்டுவளவு பகுதியில் கழிவுநீா் ஓடைக்காக குழி தோண்டப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ஓடை அமைக்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோடு நகராட்சி 15-ஆவது வாா்டு காட்டுவளவு என்ற பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீா் ஓடை அமைக்க தோண்டப்பட்ட குழி மூடப்படாமலும் கழிவுநீா் ஓடை அமைக்கப்படாமலும் வெறுமனே உள்ளது.

பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் கூறியும் தக்க நடவடிக்கை எடுக்காததால் சிபிஐஎம் கட்சியினா் மறியல் ஈடுபட்டனா். திருச்செங்கோடு - வெப்படை சாலையில் மாரியம்மன் கோயில் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கழிவுநீா் ஓடை அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், 10 பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து காட்டுவளவு பகுதியில் நகராட்சி நிா்வாகத்தினா் ஜேசிபி வாகனம் கொண்டு கழிவுநீா் ஓடை குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தது. அப்போது ஒரு பிரிவினா் தங்களது பகுதி பள்ளமாவதால் மழைக் காலங்களில் வெள்ளநீா் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது என வாக்குவாதம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com