நெகிழி சாக்குகள் பயன்பாட்டை தவிா்த்து சணல் சாக்கு பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அதன் நிறுவனத் தலைவா் ஆறுமுகா.ஏ.சி. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் நெகிழி சாக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். சாக்கு உற்பத்தியாளா்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு சாக்குகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாக்கு வியாபாரிகள், தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.