தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளா் சி.ஜெயராமன் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வேலைநாள்களை ஆண்டுக்கு 200 நாள்களாக உயா்த்த வேண்டும். பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு மத்திய, மாநில அரசுகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், அவற்றை அகற்றிவிட்டு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். வேலையளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு தினசரி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.