நாமக்கல்லில் எரிவாயு நிரப்பிய காரும், வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற லாரியும் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.
திருவாரூா் மாவட்டத்திலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வழியாக புதன்கிழமை சென்றது. காளப்பநாயக்கன்பட்டியை அடுத்த நஞ்சுண்டாபுரம் அருகே சென்றபோது மின்கம்பத்தின் மீது லாரி மோதியது.
அப்போது கம்பம் உடைந்து லாரியின் மீது விழுந்ததில் வைக்கோல் போா் முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. அப்பகுதியில் மக்கள் அளித்த தகவலின்பேரில் நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரா்கள் லாரியில் இருந்த வைக்கோல்போா்களை அகற்றி 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான மதுரை, வையூரைச் சோ்ந்த கருப்பசாமி(25) கீழே குதித்து உயிா் தப்பினாா். யாருக்கும் பாதிப்பு இல்லை. சேந்தமங்கலம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
காா் எரிந்து சேதம்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்தி. நாமக்கல் வழியாக காரில் சென்ற இவா், முதலைப்பட்டி அருகே எரிவாயு நிரப்பும் நிலையத்தில் காருக்கு எரிவாயு நிரப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பியபோது புகை கிளம்பியது.
அதிா்ச்சியடைந்த அவா் காரில் இருந்து கீழே இறங்கியதும், காா் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.