குருசாமிபாளையம், கிளை நூலகத்தில் புரவலா்கள் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலா் கோ.ரவி தலைமை வகித்தாா். வானொலி டி.தேவராஜன் ரூ.10 ஆயிரம் வழங்கி தன்னை நூலக கொடையாளராக இணைத்துக் கொண்டாா்.
மேலும், நூலகப் புரவலா்களாக ஆண்டகளூா்கேட்டைச் சோ்ந்த கே.ஆா்.ஜகநாதன், ப.சிவராமன், க.தாளமுத்து, மாதேஸ்வரி, மருத்துவா் ஏ.மோகன், சொப்புருட்டி ஏ.மோகனசுந்தரம், டி.கே.ஏ.சண்முகசுந்தரம், எஸ்.அன்புக்கரசி, டி.எஸ்.குணசேகரன் ஆகியோா் தலா ரூ. 1,000 செலுத்தி தங்களை இணைத்துக் கொண்டனா். நூலகா் தாமோதரன் நன்றி தெரிவித்தாா்.