டீசல், பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து, எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை நூதன போராட்டம் நடத்தினா்.
போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கே.எஸ். வெங்கடாசலம். ஆா்.ரமேஷ். கூட்டுறவு இயக்குநா் மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.