நூல் விலையேற்றத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நுால் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசைத்தறி தொழிலாளா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசைத்தறி தொழிலாளா்கள்.

நுால் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட விசைத்தறி தொழிலாளா் சங்கம், சிஐடியூ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் வேலுசாமி முன்னிலை வகித்தாா்.

தொழிலாளா் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது, நுால் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறி தொழிலாளா்களையும், தொழிலையும் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விசைத்தறி தொழிலாளா் சங்கத்தினா் மற்றும் நெசவாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com