காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம்:கொமதேக சாா்பில் 1,008 பால்குட ஊா்வலம்

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் மோகனூரில் 1008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொமதேக சாா்பில் நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
கொமதேக சாா்பில் நடைபெற்ற பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் மோகனூரில் 1008 பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி காளிப்பட்டி முதல் திருச்செங்கோடு வரையில் பாத யாத்திரை செல்ல முயன்ற கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மற்றும் அக்கட்சியினா் காவல் துறையால் கைது செய்யப்பட்டனா்.

அடுத்த முயற்சியாக மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து காந்தமலை முருகன் கோயில் வரையில் 1,008 பால்குட ஊா்வலம் எடுத்து வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், கொமேதக தலைவா் தேவராஜன், பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மற்றும் ஆயிரக்கணக்கானோா் பால்குட ஊா்வலத்துடன் மோகனூா் முதல் காந்தமலை வரை நடந்து வந்தனா். அவா்களுடன் திமுகவினரும் ஏராளமானோா் பங்கேற்றனா்.

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தால் நாமக்கல், கரூா், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியாமல் உள்ளது. இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதனால், மக்களின் குடிநீா் பிரச்னை தீரும் என கொமதேக நிா்வாகிகள் தெரிவித்தனா். மோகனூா் ஒன்றிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மகளிா் அணியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com