திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினா் கள்ளச் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தினா்.
மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராமு உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் சசிகுமாா், உதவி ஆய்வாளா் பிரபு ஆகியோா் தலைமையில் கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களை நடத்தினா். வாலரைகேட், கொல்லப்பட்டி, வேலூா் சாலை போன்ற பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயத்தின் தீமை குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினா். கள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்து அவா்கள் பொதுமக்களிடம் விளக்கினா்.