நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவானது ஜன. 31 நள்ளிரவு 12 மணி வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் தடைக் காலத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபா்கள் ஒன்றாகக் கூடுவதும், பொது இடங்களில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் தங்களது அத்தியாவசியம், அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.