திருச்செங்கோடு, வாலரைக்கேட்டில் மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவுபடி, திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் வழிகாட்டுதல் படி மதுவிலக்கு ஆய்வாளா் சசிக்குமாா் தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினா் கள்ளச்சாராயம், போதைப்பொருள்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாலரைக்கேட் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா். கள்ளச்சாராயம், போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினா்.