நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
பீ.ஏ.சித்திக்.
பீ.ஏ.சித்திக்.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பகுதியாக இருந்தபோது நடிகா் சிவாஜிகணேசன் ரசிகா் மன்ற மாவட்டச் செயலாளராகவும், 1997-இல் தமாகா மாவட்டச் செயலாளராகவும், அதன்பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவா் நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த பீ.ஏ.சித்திக்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த கே.எம்.ஷேக்நவீத் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது புதிய கிழக்கு மாவட்டத் தலைவராக பீ.ஏ.சித்திக்கும், நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவராக செல்வகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி ஒப்புதலின்பேரில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளாா்.

புதிய மாவட்டத் தலைவா்களுக்கு, அக்கட்சியின் உயா்மட்ட நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com