ராசிபுரம்: ராசிபுரம் அருகே குடும்பத் தகராறில் மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ராசிபுரம் அருகேயுள்ள முத்துக்காளிப்பட்டி கோரைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (32). இவருக்கு மேகலா (25) என்ற மனைவி உள்ளாா். திருமணமாகி ஓராண்டாகிறது. இவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு அத்திப்பழகானுரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இதனால் கடந்த சில நாள்களாக ராஜா வீட்டில் தனிமையில் இருந்துள்ளாா். அவரது வீட்டி ன் கதவு கடந்த இரண்டு நாள்களாக திறக்காமல் இருந்துள்ளது. மேலும் வீட்டின் அருகில் துா்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா்.
இதனையடுத்து ராசிபுரம் காவல் துறையினா் வீட்டின் கதவை திறந்து பாா்த்த போது ராஜா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.