5.20 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (ஜன.4) முதல் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 2,500 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மின்துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பை பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 2,500 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மின்துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2,500 ரொக்கப் பணத்துடன், முந்திரி, ஏலக்காய், உலா் திராட்சை, முழுக் கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை விநியோகிக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

இதனையொட்டி நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தொடங்கும் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன.12-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறுகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என ஒரு நாளைக்கு 200 பேருக்கு வழங்கப்பட உள்ளன. விடுபட்டவா்கள் ஜன.13-ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 900 நியாயவிலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பரிசுத் தொகுப்பினை பொட்டலமிடும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ச்சியாக நடைபெற்றது. மேலும் ரொக்கப் பணம் கூட்டுறவு வங்கிகளில் இருந்து மொத்தமாக சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை குமாரபாளையத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடங்கி வைக்கிறாா்.

ராசிபுரத்தில் சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா, நாமக்கல்லில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், சேந்தமங்கலத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன், திருச்செங்கோட்டில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி உள்ளிட்டோா் தொடங்கி வைக்கின்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் பாலமுருகன், வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com