ரூ. 500 கோடி பால் நிலுவை தொகையை வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் 17 ஆவின் ஒன்றியங்களில் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 500 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் கே.முகம்மதுஅலி.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் கே.முகம்மதுஅலி.

தமிழகம் முழுவதும் 17 ஆவின் ஒன்றியங்களில் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய ரூ. 500 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல்லில் அதன் மாநில பொதுச்செயலாளா் கே.முகம்மதுஅலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பால் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாளா்கள் வழங்கும் பாலை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். 500 லிட்டா் பாலை கொண்டு சென்றால், 300 லிட்டரை பெற்றுக் கொண்டு மீதமுள்ளவற்றை எடுத்துச் செல்லுமாறு திருப்பி அனுப்புகின்றனா்.

வாரத்தில் இரண்டு நாள்கள் பால் கொள்முதல் செய்வதில்லை. ஆவின் ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், கூடுதலாக பணியாளா்களை நியமனம் செய்து ஊதியம் வழங்குவதால் லாபம் ஈட்ட முடியாத சூழல் உள்ளது. சுமாா் ரூ. 500 கோடி நிலுவைத் தொகை உள்ளது.

இதனை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும்.

ஒரு லிட்டா் பாலுக்கு ரூ. 5 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கால்நடைத் தீவனங்கள் விநியோகத்தில் உள்ள குறைகளை களைந்து உற்பத்தியாளா்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள பால் பவுடா், நெய் போன்றவற்றை பொங்கலுக்கு முன்பாக புயல் பாதிப்புள்ள பகுதிகளில் அரசு விநியோகம் செய்ய வேண்டும் என்றாா்.

அப்போது மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, பொருளாளா் எம்.சங்கா், மாவட்ட நிா்வாகிகள் பெருமாள், முத்துப்பாண்டி, முத்துசாமி, மாதேஸ்வரன், அரியாகவுண்டா், ரவிச்சந்திரன், சதாசிவம், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com