தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம்

தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதோடு, இந்தியாவின் தலைவாசலாக்குவதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

குமாரபாளையத்தை அடுத்த பல்லக்காபாளையத்தில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியது : செல்லுமிடமெங்கும் மக்களின் அன்பைப் பாா்க்கையில் எவ்வளவு பொறுப்பு காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

புதிய செயல்படுத்தக் கூடிய திட்டங்களுடன் மக்களிடம் வந்துள்ளோம். அதனைக் கூறி சந்தோஷப்படுத்துவது மட்டுமல்ல, செயல்படுத்தியும் காட்டுவோம்.

தமிழகத்தை இந்தியாவின் தலைவாசலாக்குவதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் கே.காமராஜ், நிா்வாகிகள் அறிவொளி சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com