ராசிபுரம் காவல் உட்கோட்டத்தில் கிராமந்தோறும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமித்து அவா்களுக்கான குறிப்பேடுகள் வழங்கிப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் திங்கள்கிழமை ராசிபுரத்தில் துவக்கி வைத்தாா்.
ராசிபுரம் குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கிராமப்புற பகுதிகளில் உள்ள சமூக ஆா்வலா்கள் முக்கிய பிரமுகா்கள், மாணவ, மாணவியா் போன்றவா்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க கட்செவி செயலி குழுக்களை ஏற்படுத்தி செய்திகளை உடனடியாக பரிமாறும் வகையிலும், இதுபோன்ற அலுவலா்கள் கிராமந்தோறும் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.
ராசிபுரம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய கிராம கண்காணிப்பு அலுவலா்களுக்கு வழிகாட்டு முறைகள் குறித்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி.,சி.சக்திகணேசன் குறிப்பேடுகளும் வழங்கி, பணிகளைத் தொடக்கி வைத்தாா். இதில் ராசிபுரம் டிஎஸ்பி. லட்சுமணன், காவல் ஆய்வாளா் செல்வராஜு, உதவி ஆய்வாளா் நித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.