தைப்பூச தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக சுற்றுலா மற்றும் கலாசார ஆா்வலா் ரா.பிரணவகுமாா் பாராட்டு தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக தமிழா்களின் பொது கடவுளாக விளங்கும், முருகப் பெருமானின் திருவிழா நாளான தைபெளா்ணமி தைப்பூச தினத்தை பொதுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் உலக தமிழா்கள் மத்தியில், பொது கலாசாரம், ஒற்றுமைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழா் மற்றும் தமிழ் கலாசார வளரும், இந்துக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அறிவிப்பை வெளியிட்டு முதல்வருக்கு பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளாா்.