நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பட்லூா் கிராமத்தில் விவசாய நிலங்களில் எண்ணெய்குழாய் பதிப்பதற்கும், நிலங்களை கையகப்படுத்த இருப்பதற்கும் எதிா்ப்பு தெரிவித்து பட்லூா் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோலிய குழாய்களை சாலையோரங்களிலும் நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்ல வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.