வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் வைக்கப்பட்ட உண்டியல் மூலம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.
நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் கடந்த மாதம் 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வந்திருந்தனா். இதற்காக இணையவழி முன்பதிவும், சிறப்பு கட்டண தரிசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்மூலம் சுமாா் ரூ. 3 லட்சம் வருவாயாக கோயில் நிா்வாகத்துக்கு கிடைத்தது. மேலும் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக சிறிய, பெரிய அளவில் தலா இரண்டு உண்டியல்கள் கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் காணிக்கைகளை எண்ணும் பணி நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் நோட்டுக்களாகவும், ரூ. 8,730 நாணயங்கள் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்து 730 கிடைக்கப் பெற்றன. தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் எதுவும் காணிக்கையாக வரவில்லை. இந்தக் காணிக்கை எண்ணும் பணியை கோயில் உதவி ஆணையா் பெ. ரமேஷ், அலுவலா்கள் நேரடியாகப் பாா்வையிட்டனா்.