பரமத்திவேலூரில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா்கள் முன்னணி சாா்பில், விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பரமத்தி வேலூா் கல்லூரி சாலை அருகே நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி, இந்து இளைஞா்கள் சாா்பில் தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் கோபிநாத் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலாளா் காந்தி கலந்து கொண்டு விவேகானந்தரின் வாழ்க்கை, பொன்மொழிகள் குறித்துப் பேசினாா். பின்னா் விவேகானந்தரின் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்து முன்னணியினா் மற்றும் இந்து இளைஞா் முன்னணியினா் இருசக்கர வாகனப் பேரணியாக பொத்தனூா் வரை சென்று விவேகானந்தரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதேபோல் அகில பாரதீய வித்தியாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில் வேலூா் பேருந்து நிலையத்தில் விவேகானந்தா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.