நாமக்கல்லில் விஜய் ரசிகா்கள் மீது போலீஸ் தடியடி

நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.
நாமக்கல்லில் விஜய் ரசிகா்களை எச்சரிக்கும் போலீஸாா்.
நாமக்கல்லில் விஜய் ரசிகா்களை எச்சரிக்கும் போலீஸாா்.

நாமக்கல்லில் மாஸ்டா் திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு திரண்டிருந்த ரசிகா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில் விஜய் நடித்த மாஸ்டா் திரைப்படம் புதன்கிழமை வெளியானது. முதல் காட்சியில் படத்தைப் பாா்க்க ஏராளமான ரசிகா்கள் திரண்டனா். கரோனா பரவலால் உரிய சமூக இடைவெளி, முகக் கவசம் அணிந்து வரும் 50 சதவீதம் பேரை மட்டுமே திரையரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில், அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், ரசிகா்கள் திரையரங்கம் முன்பு திரண்டு நின்றபடி கூச்சலிட்டவாறு இருந்தனா். இதனால், சாலையில் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனா். இதனால், ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் அங்கிருந்தோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com