பரமத்தி வேலூா் அருகே நன்செய்இடையாறு காவிரியாற்றில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து காா் மூலம் மணல் திருடப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் இருந்து மணலை சாக்கு மூட்டைகளில் கடத்தி வந்தவரை பிடிக்க முயன்றனா். ஆனால் காரின் உரிமையாளா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா். பின்னா் போலீஸாா் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த வாசுதேவனை தேடி வருகின்றனா்.