நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பாக ஓ சௌதாபுரம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தொழிலாளா்களுக்கான மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தலைமை மருத்துவமனை மனநல மருத்துவா் வ.முகிலரசி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா்.
இதில் மனநல மருத்துவா் வ.முகிலரசி பேசும்போது, வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு, எதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கும் நிலைக்கு மனச்சோா்வு என்று அழைக்கப்படுகிறது. மனச்சோா்வு என்பது ஒரு நோய் இது பரம்பரையாக வருவதாக இருக்கலாம், மன அழுத்தத்தினாலும் மன இறுக்கத்தினாலும் வரலாம். இது தொடா்ந்து ஒரு மாதம் இருந்தால் நிச்சயமாக மனோதத்துவ மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
குடி மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதும் மனநோயே. மனநோய்களுக்கு மனநல மருத்துவரை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மனநோய்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டால், குறைந்த அளவு மருந்துகளிலேயே குணமடைய இயலும். மனநோய்க்கான அறிகுறிகள் மூலம் இதனைக் கண்டறிந்து கொள்ளலாம். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி இதற்கு நல்ல பலனளிக்கும் என்றாா். முகாமில், மனநல ஆலோசகா் ரமேஷ் ட்ரெஸ் பால் மூச்சுப் பயிற்சி பயிற்சிளித்தாா்.