நாமக்கல்லில் சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள்.
நாமக்கல்லில் சனிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள்.

ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள் திடீா் வேலைநிறுத்தம்

நாமக்கல்லில் ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள் சனிக்கிழமை காலை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல்: நாமக்கல்லில் ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்கள் சனிக்கிழமை காலை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் பூங்கா சாலையில் 50-க்கும் மேற்பட்ட ஷோ்-ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைவான தொலைவு பகுதிகளுக்கு பேருந்தை காட்டிலும் இவற்றையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரான நாமக்கல்லைச் சோ்ந்த முருகேசன் என்பவா், பயணிகள் ஆட்டோவை கொண்டு பொதுமக்களை அழைத்துச் சென்று வந்தாா். இதனால் அவருக்கும், ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. அப்போது முருகேசன் தனது ஆதரவாளா்கள் சிலரை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அனைத்து ஷோ்-ஆட்டோ ஓட்டுநா்களும் தங்களுடைய வாகனங்களை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்தனா். சம்பந்தப்பட்ட முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்யும் வரையில் வாகனங்களை எடுக்க மாட்டோம் என்றனா்.

நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் துா்க்கைசாமி, தங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் அடிப்படையில் பிற்பகலுக்கு மேல் ஷோ்-ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com