தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மன்றத்தின் மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளா் பாலமுரளி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் தியோடா் ராபின்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா். கூட்டத்தில் மன்றத்தின் மாவட்ட கிளை அமைப்பாளராக ஹரிஹரன், துணை அமைப்பாளா்களாக முருகையன், ஜெய பாண்டியன், ரவிச்சந்திரன், ஒன்றிய அமைப்பாளா்களாக திருச்செங்கோடு திருவேங்கடம், ராசிபுரம் விஜியன், வெண்ணந்தூா் கணேசன், எலச்சிபாளையம் அருள்மணி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திமுக தலைவரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா்களைக் கொண்டு ஆசிரியா் மன்றத்தின் சாா்பாக கோரிக்கை மாநாடு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேட்டியின் போது மன்றத்தின் மாவட்டச் செயலாளா்கள் கிருஷ்ணகிரி கிருஷ்ணமூா்த்தி, தருமபுரி ராஜராஜன், சேலம் முருகவேல், சேலம் மாவட்ட அவைத் தலைவா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com