நாமக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் அரசுத்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் 19 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.
நாமக்கல், மோகனூா், புதுச்சத்திரம், எருமப்பட்டி, ராசிபுரம், வெண்ணந்தூா், எலச்சிப்பாளையம் உள்ளிட்டவற்றின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சியில் பணியாற்றுபவா்கள் வளா்ச்சிப் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் வட்டார வளா்ச்சி அலுவலராக இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.