நாமக்கல்லில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதில், சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 62 ஆயிரம் மதிப்பிலான மூன்றுசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.