குமாரபாளையத்தில் 65 மது புட்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 31st January 2021 02:13 AM | Last Updated : 31st January 2021 02:13 AM | அ+அ அ- |

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பெட்டிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 மது புட்டிகளைப் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
குமாரபாளையத்தை அடுத்த குள்ளப்பா நகரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மகன் அருண் (22). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடையில் மது புட்டிகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், குமாரபாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 மது புட்டிகளை பறிமுதல் செய்து, அருணை (22) கைது செய்தனா்.