வெண்ணந்தூா் வட்டார விவசாயிகளுக்குநுண்ணீா்ப் பாசனத் திட்டத்துக்கு மானியம்

வெண்ணந்தூா் வட்டாரத்தில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சேர விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பங்கள் வழங்கலாம்

ராசிபுரம்: வெண்ணந்தூா் வட்டாரத்தில் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சேர விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பங்கள் வழங்கலாம் என வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிா்செய்யும் விவசாயிகளுக்கு 519 ஹெக்டா் பரப்பளவிற்கு நுண்ணீா்ப் பாசன உபகரணங்கள் வழங்கிட ரூ. 4 கோடியே 30 லட்சம் வழங்கிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கா் வரை நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

ஆதிபழங்குடி, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் ஆகிய ஆவணங்கள் வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் நடப்பாண்டில் புதிதாக இத்திட்டத்தில் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழாய் லைன் பதிக்க குழி எடுக்க ஆகும் செலவுத் தொகை ஹெக்டருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். மேலும் இதன் துணைத் திட்டமாக பிரதான குழாய் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ. 10 ஆயிரம், புதிதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போா்வெல்லில் மின்மோட்டாா் பொருத்திக் கொள்ள ரூ. 15 ஆயிரம், பாசனத்திற்காக நீா்த் தேக்கத் தொட்டி 116 கனமீட்டா் அளவில் அமைத்திட மானியமாக ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com