அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை: ஜூலை 16-ஆம் தேதி கடைசி நாள்

நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் ப.முருகேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருவா் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம் . தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். அந்த எட்டு ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப் பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம் . இந்தத் திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசா்வ் வங்கியின் மூலம் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தங்கப் பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இந்தத் திட்டம் வரும் 16-ஆம் தேதி வரை மட்டுமே. அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,807/- என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவா்களுக்கு உரிய அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமாா் 20 நாள்களுக்கு பிறகு தங்கப் பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புபவா்கள் அஞ்சல் அலுவலகங்களையோ அல்லது அஞ்சலக வணிக வளா்ச்சி அலுவலா்களான ஆா். சிவக்குமாா் (98941-12154), அ.சங்கா் (90428-55559) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் .இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதாா் எண், பான் காா்டு, வங்கிக் கணக்கு மிகவும் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com