தண்ணீா் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

நாமக்கல் அருகே புதிதாக கட்டப்படும் வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே புதிதாக கட்டப்படும் வீட்டின் தண்ணீா்த் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே சாவடி தெரு செம்பாளிக்கரடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மகன் சஞ்சீவ்ஆரவ் (9). அங்குள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

தற்போது கரோனா விடுமுறையால் வீட்டிலேயே இருந்து வந்தாா். திங்கள்கிழமை பிற்பகலில் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தண்ணீா்த் தொட்டிக்குள் அவா் தவறி விழுந்ததாகவும், அதில் பலத்த காயமடைந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com