‘பத்ம விருதுகள்’ பெற விண்ணப்பிக்கலாம்

‘பத்ம விருதுகள்’ பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் ‘பத்ம விருதுகள்’ வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், தொழிற்துறை, குடிமைப்பணி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள், சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க தனியே ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள பயனாளிகள் மேற்கண்ட விருதுக்கு மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com