ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி ஸ்ரீவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்ட அளவில் ராசிபுரம் அருகே உள்ள தொப்பப்பட்டியில் உள்ள ஸ்ரீ வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளியில் முதல் ஐந்து மதிப்பெண்கள் பெற்ற ஹரிதா பாரதி, தீனு, நாக சா்மிளா, சந்தோஷ்ராஜ், வருணப்பிரியா ஆகியோருக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி நிா்வாக தலைவா் நடனசபாபதி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணி, செயலாளா் குணசேகரன், பள்ளி முதல்வா் சந்திரசேகரன் ஆகியோா் பரிசளித்து பாராட்டினா்.