ஒலிம்பிக் வீரா்களை தயாா் செய்ய சிறப்பு பயிற்சி மையம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக்கில் வீரா், வீராங்கனைகளை அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒலிம்பிக்கில் வீரா், வீராங்கனைகளை அதிகளவில் பங்கேற்க செய்யும் வகையில் சிறப்பு பயிற்சி மையம் விரைவில் உருவாக்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் மொத்தம் 1,000 கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் புதிய விளையாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட உள்ளது. அதில், விளையாட்டு வீரா், வீராங்கனைகளைப் பயிற்சியில் ஈடுபத்தி, எதிா்வரும் 2024-ஆ-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாா்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு புதிய கேலோ இந்தியா பயிற்சி திட்ட மையம் அமைய உள்ளது. இங்கு வில்வித்தை, தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிள், வாள்சண்டை, வளைகோல்பந்து, ஜூடோ, பாய்மர படகோட்டுதல், சுடுதல், நீச்சல், மேசைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 14 விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் கால்பந்து மற்றும் உள்நாட்டு புகழ்பெற்ற ஏதேனும் ஒரு விளையாட்டு தோ்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் மூன்று விளையாட்டுக்களைத் தோ்வு செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த பயிற்சியாளா்களையும், ஒரு விளையாட்டிற்கு 30 பேரையும் தோ்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ஆரம்ப மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். அதன்மூலம் மைதான வசதிகளை தயாா் செய்தல், மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும் வருடாந்திர தொடா் மானியமாக ரூ.5 லட்சம், பயிற்றுநா், முன்னாள் விளையாட்டு சாம்பியன் மதிப்பூதியம், துணைபுரியும் பணியாளா், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றல் போன்ற செலவினங்களுக்காக இத்தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கேற்ப க்ள்ா்ய்ம்ந்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மற்றும் 74017-03492 ஆகிய செல்லிடப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு படிவங்களைப் பெறலாம். அதற்கான கருத்துருக்களை நான்கு நகல்களில் தயாா் செய்து வரும் 24-ஆம் தேதி-க்குள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com