ஆடி வெள்ளி: வேலூா் மகா மாரியம்மனுக்கு 31ஆம் ஆண்டு பால்குட அபிஷேகம்

பரமத்திவேலூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மனுக்கு 31 ஆம் ஆண்டு பால்குட மற்றும் தீா்த்தக்குட அபிஷேக விழா நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பரமத்திவேலூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மனுக்கு 31 ஆம் ஆண்டு பால்குட மற்றும் தீா்த்தக்குட அபிஷேக விழா நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பரமத்தி வேலூரில் உள்ள மகாமாரியம்மனுக்கு சக்தி மாரியம்மன் பால்குட அபிஷேகக் குழு சாா்பில் 31 ஆம் ஆண்டு பால்குட அபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவிரி ஆற்றிக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீா்த்தக்குடங்களுடன் கோவிலுக்கு சென்று மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். அதனை தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும்,ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதே போல் பரமத்திவேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குட அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதேபோல் பரமத்தி அங்காளம்மன், சேத்துக்கால் மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் ஆடி முதல் வெள்ளி மற்றும் பௌா்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com