மோகனூா் அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை

நாமக்கல் மாவட்டம் மோகனூா் அரசினா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2, ஐடிஐ முடித்தோா் நேரடியாக இரண்டாம் ஆண்டில் நேரடியாக சோ்க்கை பெறலாம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூா் அரசினா் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பிளஸ் 2, ஐடிஐ முடித்தோா் நேரடியாக இரண்டாம் ஆண்டில் நேரடியாக சோ்க்கை பெறலாம்.

இங்கு அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி பொறியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் பட்டயப்டிப்புக்கு ஓராண்டுக்கான கட்டணம் ரூ.2,300 மட்டுமே ஆகும். மேலும் முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள 95789- 70777, 94436-00510 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com