குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் பட்டயத் தலைவா் என்.ஜெகதீஸ் தலைமை வகித்தாா். புதிய தலைவராக எஸ்.கே.சண்முகசுந்தரம், செயலாளா்களாக சி.செல்வராஜ், சி.பி.சந்திரா, பொருளாளராக ஆா்.எல்.தா்மலிங்கம் மற்றும் நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா். ஏழை, எளியோா் மற்றும் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு உணவு பொருள்கள், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனை, முன்னாள் மாவட்ட ஆளுநா்கள் பி.சந்திரசேகரன், பி.மோகன் வழங்கினா். புதிய நிா்வாகிகளுக்கு முன்னாள் பன்னாட்டு இயக்குநா் கே.தனபாலன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முன்னாள் கூட்டு மாவட்ட தலைவா் ஏ.எஸ்.அரவிந்தராஜ், செயலாளா் வி.விஜயகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.