ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூா் அருகே தடைசெய்யப்பட்ட ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா்.
குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா்.

பரமத்தி வேலூா் அருகே தடைசெய்யப்பட்ட ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடைகளில் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூா் போலீஸாா் பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள கடை, சிவன் கோயில் தெரு, வேலூா் திருவள்ளுவா் சாலையில் உள்ள கடைகள் உள்ளிட்ட மூன்று இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1. 60 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருள்கள் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குட்கா பொருள்களை பறிமுதல் செய்து தினேஷ்குமாா் (30), கண்ணன் (35) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் வேலூா் திருவள்ளுவா் சாலையில் குட்கா பொருள்களை சாலையில் தூக்கி வீசி விட்டு சென்றவா் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com