மோகனூரில் திமுக சாா்பில் ரத்ததான முகாம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சாா்பில் ரத்த தான மூலம் மோகனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக சாா்பில் ரத்த தான மூலம் மோகனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்குத் தலைமை வகித்து, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ராமலிங்கம் தொடக்கி வைத்தாா். இதில், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் 33 போ் ரத்த தானம் செய்தனா். தொடா்ந்து, மோகனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த சட்டப் பேரவை உறுப்பினா் ராமலிங்கம், நோயாளிகள், பெண்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்துக் கேட்டறிந்தாா்.

மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் அன்புமலா், மோகனூா் வட்டார மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, நாமக்கல் மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவா் கண்ணப்பன், திமுக மாநில விவசாயத் தொழிலாளா் அணி இணைச் செயலாளா் கைலாசம், மாவட்ட அவைத் தலைவா் உடையவா், ஒன்றியப் பொறுப்பாளா் நவலடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com