எஸ்.வாழவந்தி அருகே ஆண் சடலம் மீட்பு

பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட எஸ்.வாழவந்தி அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பரமத்தி போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சரகத்துக்கு உள்பட்ட எஸ்.வாழவந்தி அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை பரமத்தி போலீஸாா் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி காவல் நிலையத்துக்கு உள்பட்ட எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையத்தில், பாலகிருஷ்ணன் என்பவரது சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கோரைப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் கிடப்பதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு, இறந்தவா் யாா், எந்த ஊா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவா் அடா் நீல நிறத்தில் ஜீன்ஸ் துணியால் ஆன பேன்ட் மட்டும் அணிந்திருந்தாா் என்றும், அவருக்கு 30 முதல் 35 வயதிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com