நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 597 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,444-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 900 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 30,342 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 6,780 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் ஏற்கெனவே 309 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், மேலும் 13 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 322-ஆக அதிகரித்துள்ளது.