நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருச்செங்கோடு சாலையில் உள்ள எல்பிஜி லாரி உரிமையாளா்கள் பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா்
nk11rate_1106chn_122_8
nk11rate_1106chn_122_8

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருச்செங்கோடு சாலையில் உள்ள எல்பிஜி லாரி உரிமையாளா்கள் பெட்ரோல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா்.

பெட்ரோல், டீசல் விலையுயா்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வி.பி.வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியம், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராஜேந்திரன், நிா்வாகிகள் வள்ளிபுரம் ரகு, தாஜ், அருணகிரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ப. வேலூா் ரோட்டில் உள்ள டிசிஎம்எஸ் பெட்ரோல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் பி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது சமையல் எரிவாயு உருளைகளுக்கு மாலை அணிவித்து கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், மாநில சேவாதள கூடுதல் செயலாளா் செல்வகுமாா், மேற்கு மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி, மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

எலச்சிப்பாளையம் வட்டாரம் சாா்பாக குமரமங்கலம் பெட்ரோல் நிலையம் முன்பு அரம்வளத்தாா், நமராஜன் தலைமையிலும், மல்லசமுத்திரத்தில் நகரத் தலைவா்.ராஜா தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com