ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கல்

ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கருப்புப் பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கல்

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை மருத்துவா்களிடம் ஒப்படைக்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.

ராசிபுரம், ஜூன்11: நாமக்கல் மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான கருப்புப் பூஞ்சை நோய்த் தடுப்பு மருந்துகளை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனை தலைமை மருத்துவா்கள் பி.ஜெயந்தி, கலைச்செல்வி ஆகியோரிடம் மருந்துகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளா் கே.செல்வம், நகரச் செயலாளா் என்.ஆா்.சங்கா், நகர இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கே.பி.ஜெகநாதன், வெண்ணந்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட பொறியாளா் அணி மாணிக்கம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சித் தலைவா் அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com